1
கரம்பொனின் வரலாற்றுச் சுருக்கம்
ஊர்காவல்துறைக்கு அணித்தாய் உள்ள இடம்
கரம்பொன். இதன் பழைய பெயர் கரம்பன்
என்பதாகும். கல்வியாளர் இதனைத் திருத்திக்
கரம்பொன் என எழுதினர். கரம்பொன் என்ற பெயரே
இன்று பெரிதும் வழக்கிலுள்ளது.
கரம்பொனின் அருள்மிகு ஆலயங்கள்,
தேவாலயங்கள்
கரம்பனின்
நுழை வாயிலில் கணபதீஸ்வரம் என்றழைக்கப்படும்
சிவன் கோவிலும், கரம்பொன் கிழக்கிலும்,
மேற்கிலும் இரு முருகமூர்த்தி கோவில்களும்,
கரம்பொன் மேற்கின் வடமேற்குத் திசையில்
பிள்ளையார் கோவிலும், மேற்கெல்லையில் கடற்கரை
ஓரத்தில் கண்ணகி அம்மன் கோவிலும், கரம்பொன்
மேற்குக்கும் தெற்குக்கும் இடையேயுள்ள தெங்கங்
குளத்தினருகே சிறிய ஞானவைரவர் கோவிலும்,
கரம்பொன் கிழக்கில் காளி கோவிலும், சுருவில்
வீதியில் வைரவ கோவிலும் உள்ளன.
கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாலயம்
1917ம்
ஆண்டளவில் 'சண்முகநாத வித்தியாசாலை'
தொடங்கப்பட்டது. முதலில் ஓலைக் கொட்டிலாக
இருந்த இப்பாடசாலை 1921ம் ஆண்டில் இன்றைய
கட்டிட அமைப்பைக் கொண்டதாக அமைந்தது.
முருகமூர்த்தி கோவிலுக்கு அண்மையில்
இப்பாடசாலை அமைந்ததால் சண்முகநாத வித்தியாசாலை
எனப்பெயர் சூட்டப் பெற்றது.
கரம்பொனின் புகழ்பூத்த பெருமக்கள்
தவத்திரு.
மகாதேவசுவாமிகளின் அருளாட்சி நடைபெற்ற புண்ணிய
பூமி கரம்பன். சைவமும் தமிழும் வளர்த்த
பெருந்தகை மகாதேவசுவாமிகள். கரம்பனைக்
'கரம்பொன்' ஆக்கிய பெருந்தகைகளில் முதன்மை
வகிப்பவரே தவத்திரு. மகாதேவசுவாமிகள் என்றால்
மிகையாகாது
இவ்
இணையத்தில் இருக்கும் ஆக்கங்கள், புகைப்படங்கள் போன்றன
முன் அனுமதி இன்றி பிரதி எடுத்தலோ, பிரதி எடுத்து
சிதைவு செய்து பாவனைப்படுத்துதலோ கூடாது.